21 January 2011

உன்னோடதானதொரு தனிமை


 மைதியான நள்ளிரிவில்
 எங்கேயோ வீறிட்டு அழும் 
கைக்குழந்தையின் சத்தமும் 
என் படுக்கையின் 
காலியிடமும் 
அதிகமாய் நினைவுபடுத்துகிறது 
உன்னையும் 
பின்னர் 
உன்னோடு 
இருந்த என்னையும்...