பெங்களூருவின் வழக்கமான
போக்குவரத்து நெரிசல்..
என் பேருந்தின்
அருகே நிற்கிறது
ஒரு பள்ளி பேருந்து ..
ஒரு ஜன்னலின் ஓரமாய்
அமைதியாய் தனியாய்
அழுது கொண்டிருக்கும் சிறு பெண்..
என்னவாய் இருக்கும் காரணம்..
நான் அவ்வயதில் எதற்கு
இப்படி அமைதியாய் அழுதேன் ..
சில காரணங்களை
சொல்ல தெரிவதில்லை..
சொல்லி புரிவதில்லை ..
அவளுடைய காரணமாவது
சாதரணமானதாக இருக்கட்டும்..
சாதரணமானதாகவே இருந்துவிடினும்
சகுனம் சரியாக இல்லை
இந்த மொத்த சமூகத்துக்கும்...