தயங்காமல்
"நீங்க தமிழா ?" என்று
கேட்க முடியாததை விட
மோசமான ஒரு கணத்தை
நான் கடந்ததில்லை !
இனியும் அந்த கணத்தை
சந்திக்க விரும்பவில்லை !!
நீராய் மொழி..
குடுவையாய் மக்கள் ..
குடுவையின் நிறமாய் தேசம் ..
நிறம் கண்டு குடுவையை
நொறுக்கி விட்டு
நீரை தொலைத்து நிற்கிறோம் !
ஆவியான நீர்
மழையாய் பொழியட்டும்..
குடுவையின் நிறமிங்கு
அழிந்து போகட்டும் ..
குடுவையும் நீரும்
மட்டும் மிஞ்சட்டும்..