03 May 2012

தவறா மன்னிப்பா

பெருந்தவறுகளின் வலியில்
உழலாதவரை
மன்னிக்க தெரிவதில்லை...
மன்னிக்க பழகியபின்
இங்கு எதுவுமே
பெருந்தவறில்லை...

27 February 2012

குடுவையும் நீரும்

தயங்காமல்
"நீங்க தமிழா ?" என்று
கேட்க முடியாததை விட
மோசமான ஒரு கணத்தை
நான் கடந்ததில்லை !
இனியும் அந்த கணத்தை
சந்திக்க விரும்பவில்லை !!

நீராய் மொழி..

குடுவையாய் மக்கள் ..
குடுவையின் நிறமாய் தேசம் ..
நிறம் கண்டு குடுவையை
நொறுக்கி விட்டு
நீரை தொலைத்து நிற்கிறோம் !

ஆவியான நீர்

மழையாய் பொழியட்டும்..
குடுவையின்  நிறமிங்கு
அழிந்து போகட்டும் ..
குடுவையும் நீரும்
மட்டும் மிஞ்சட்டும்..


18 January 2012

உணவு

கடல் கடந்து வந்தபின்
வீட்டிலிருந்து வந்த
உணவு பொருளில்
கண்டெடுத்த முடி
ஏற்படுத்தும் உணர்வு
கண்டிப்பாய் கோபமில்லை ...