நீ.. நான்.. நாம்..
01 September 2011
செல்லம்மாவும் காதலும்
செல்லம்மா காத்திருந்த காதலும்
செல்லம்மாவிற்கு காத்திருந்த காதலும்
ஒன்றுதான்
பாரதிக்கு சொல்ல தெரியவில்லை
பாரதி சொல்லாமல் புரியவில்லை
மானா புலியா
சலனமின்றி நகர்கின்றன
என் நிமிடங்கள்..
புலிக்கு பயந்த மானா..
மான் மேல் பாய
காத்திருக்கும் புலியா ..
உருவ வழிபாடு
பூந்தொட்டிகளுக்கு
நடுவே "பார்பி டால்".
முன்னே கண் மூடி
அமர்ந்திருக்கிறது ஒரு குழந்தை.
உண்மையான உருவ வழிபாடு.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)