29 December 2009

அழகாய் இருக்கிறது ..

தேநீர் கோப்பைக்கு
வண்ணம் தீட்டி கொண்டே கேட்கிறாய்
வண்ண கலவை
சரியாய் இருக்கிறதா என்று ..
தீர்க்கமாய் இருக்கும்
உன் விழிகளை
மட்டும் பார்த்து சொல்கிறேன்
"அழகாய் இருக்கிறது " என்று ....

17 December 2009

யார் கணக்கு தவறு ?!?

கார்த்திகை மாதம்
தேவர்களின் இரவு
மாலையில் விளக்கேற்றினாள்  அம்மா...
மார்கழி மாதம
தேவர்களின் அதிகாலை
காலையில் விளக்கேற்றினாள்  அம்மா...
எப்படி ஒரே நாளில்
என் இரவு விடியலாகிறது... தேவருடயதும் ..
யார் கணக்கு தவறு ?!?

14 December 2009

எங்கே என்னுடையது

என்னை கடக்கும்
எல்லா குழந்தை தள்ளுவண்டியிலும்
தேடி கொண்டிருக்கிறேன்
என்னுடையதை..

சண்டை

கறிக்கடை கூண்டு..
கோழிகளுக்குள் சண்டை ..
முதல் சாவு யாருடையது?

நீயா நானா ?!?

உனக்கு என் மௌனம்
புரியவில்லை என்று ..
வார்த்தைகள் சேகரித்து
ஒத்திகை பார்த்து
ஒரு காலை தேநீரில்
ஒப்பித்தேன் அனைத்தையும்

பதில் எதிர்பார்த்து
உன் முகம் பார்கையில்
செய்திதாளில் இருந்து
முகம் திருப்பாமல் கேட்கிறாய்
"தெலுங்கானா பிரச்சனை எப்பொழுது தீரும் ?"
உனக்கு புரியவில்லையா ??


இல்லை எனக்கு புரிய வைக்க தெரியவில்லையா ??