உனக்கு என் மௌனம்
புரியவில்லை என்று ..
வார்த்தைகள் சேகரித்து
ஒத்திகை பார்த்து
ஒரு காலை தேநீரில்
ஒப்பித்தேன் அனைத்தையும்
பதில் எதிர்பார்த்து
உன் முகம் பார்கையில்
செய்திதாளில் இருந்து
முகம் திருப்பாமல் கேட்கிறாய்
"தெலுங்கானா பிரச்சனை எப்பொழுது தீரும் ?"
உனக்கு புரியவில்லையா ??
இல்லை எனக்கு புரிய வைக்க தெரியவில்லையா ??